நாளைய குழந்தைகளான நீங்கள், தொழில்நுட்பத்தைக் கொண்டு சிறந்த மற்றும் தனிப்பட்ட முறையில் கல்வி கற்க உபயோகிக்கிறீர்கள். உங்கள் கல்வியின் பலனை முழுவதும் அனுபவிக்க தொழில்நுட்பம் இந்த ஆறு வழிகளில் உதவும்.
 
தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறையால், உங்கள் வகுப்பின் சக மாணவர்களின் வேகத்திற்கு இணையாக நீங்கள் கற்கத் தேவையில்லை. ஈ-லேர்னிங் காரணமாக உங்களுக்குத் பிடித்தமான வேகத்தில் நீங்கள் கற்கலாம்.
 
வழக்கமாக நீங்கள் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு பாடம் இருக்கலாம். மெய்நிகர் கற்றல் மூலம், அந்தப் பாடம் தொடர்பான வேடிக்கையான கலந்துரையாடல்கள் மற்றும் காணொளிகளைக் கண்டு உங்களுக்கு சுவாரஸ்யம் சேர்ப்பதாக மாற்ற முடியும்.
 
தொழில்நுட்பம் காரணமாக, உங்கள் கற்றல் முறை பற்றி உங்கள் பெற்றோரும் அறிந்திருக்க முடியும். மெய்நிகர் கற்றலில் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கவும் கருத்துக்களைப் புரிந்துக்கொள்ளவும் அவர்களது உதவியை நீங்கள் நாடலாம்.
 
ஒரு செயல்திட்டம் செய்யும் பொழுது அல்லது படிக்கும் பொழுது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், இணையத்தில் தேடுவதன் மூலம் தொழில்நுட்பம் கொண்டு அதைத் தீர்க்கலாம்.
 
புத்தகங்கள் போன்ற எந்த கருவியும் ஈ-லேர்னிங்கிற்குத் தேவையில்லை ஏனென்றால் பல தேர்வுகள் இணையத்தில் கிடைக்கின்றன. இதனால் உங்கள் கல்விச் செலவும் குறையும்.
 
இனிமேல் நீங்கள் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொண்டு மட்டும் கற்கவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் இருப்பிடம் மற்றும் செலவிடும் தகுதியைத் தாண்டி, உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க சந்தேகங்களைத் தீர்க்க மற்றும் தொடர்ந்து கற்க பல இலவச ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
 
இணையவழி கற்றலில் இருக்கும் இந்த நன்மைகளை எடுத்துக்கொண்டு சிறந்த, அனைத்தும் அறிந்த முறையில் கல்வி கற்றுக்கொள்ளுங்கள்.
Aarambh is a pan-India PC for Education initiative engineered to enhance learning using the power of technology; it is designed to help parents, teachers and children find firm footing in Digital India. This initiative seeks to connect parents, teachers and students and provide them the necessary training so that they can better utilise the PC for learning, both at school and at home.